Wednesday, June 8, 2016

கண்மைக்காரி -2

ஈர முத்தம் 
---------------------

அவன் -கதிர்
திமிர் பிடித்தவன் -ஆம்
என்னை பிடித்தவன்
அல்லவா!

எங்கு தொடங்கும்
இந்தக் காதல் ?

எங்களுக்கு முத்தத்தில்
தொடங்கியது !

ஆம் ! முரட்டுப் பயல்
முத்தத்தில் தொடங்கினான் !
பார்த்த மறு நொடி
முத்தம் !

உதட்டில் உதடு
தொட்டு ஈரமுத்தம் -முதல்
அசைவ முத்தம்









ஏன்டா முரடா!
பார்த்தவுடன் முத்தமா ?

பாலில் பெண்செய்து
ரோஜாவை இதழ் - என்றால்
எவன் விடுவான்

பதில் கேட்டால்
வெட்கம் தருவான்
செல்ல முட்டாள் !

பிறந்த சில நொடியில்
'பாப்பா பார் ' என்றாவுடன்
கிடைத்தது ஈர முத்தம் !

பாப்பா எனக்கு- என்று
அன்றே என்னை reserve
செய்திருக்கிறான்
செல்ல முரடன் ..

(யாழினி - முதல் நாள்
கதிர் - ஐந்து வயது )




6 comments:

  1. Superb ...
    Innum neriya elutha valthukkal

    ReplyDelete
  2. அருமையான கவிதை,
    சிறப்பான உவமை,
    மொத்தத்தில் நிறைவு..!

    ReplyDelete