--------------------------------
அறியாப் பிள்ளை
தந்த தொல்லை
அந்த முத்தம் ..!
ஐயோ ! அப்பிடி கொஞ்சக்
கூடாது மா ! என்று
குட்டிக் கதிரிடம்
கத்தி என்ன ஆகும் !
அழகாய் திரும்பி
'பாப்பா என்னுது'
பரவச பதில் !...
அதோடவா விட்டான் !
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'
'பாப்பா என்னுது'.........
என்று சொன்னதை கூட
எண்ணிவிடலாம் -அவன்
குடுத்த முத்தங்கள்
எண்ணில் அடங்கா
ஆனால் என்னில்
அடங்கும் !
யாழினி(து) தான்
முத்தம் தந்தே இனிமை
சேர்த்திருக்கிறான்....
மின்சாரம்
-------------------------
அவள் விரல்
படப் பாய்ந்து
பரவும் ...
நாடி , நரம்பு
தேடிப்பிடித்து
நிரப்பும் !.....
விரல் பட்டால் போதும்
மூளையின் மடிப்புகள்
அகன்று மின்னிப்
பளபளக்கும் !
விரல் வழி
மின்சாரம் -எடிசன் அறியாத் தத்துவம்


விரல் வழி
ReplyDeleteமின்சாரம் -எடிசன்
அறியாத் தத்துவம்....pinetenga thala
அறியாப் பிள்ளை
ReplyDeleteதந்த தொல்லை
அந்த முத்தம் ..! aarambam ae asathala iruku :)