Tuesday, June 7, 2016

கண்மைக்காரி -1

கண்மைக்காரி
--------------------------
எழுதித் தொலைத்த-பல
கதைகள் உண்டு ..

இது எழுதும் போது -நான்
தொலைந்த கதை ..!

மை பூசி கண் ஓரம்
விரல் வைத்து இழுப்பாள்
மையோடு நானும்
மையல் ...!

கவிதை எழுத நான்
யோசிப்பதே இல்லை -அவளை
வாசித்து விடுவேன் .

அவள் -யாழினி .

யாழ் இனிதோ
யான் அறியேன்
இனி , நீ இனிது
நீ மட்டும் இனிதென
யாம் அறிவோம்

எனைப் பார்த்து விரியும்
அவள் கண் போலே
கண்மைக்காரி  இனி இனிதாய்........

13 comments: